இதுவரை மின் இணைப்புடன் சேர்க்கப்பட்ட ஆதார் எண்கள் எவ்வளவு? - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்புடன் நேற்றுவரை இணைக்கப்பட்ட ஆதார் எண்களின் எண்ணிக்கையை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.65 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.34 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 52.16 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் வீட்டு மின் இணைப்புகள், குடிசை மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் விசைத்தறி மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஒரு மாத காலத்துக்கு சிறப்பு முகாம்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in