தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம்- நாகர்கோயில், மங்களூரு- தாம்பரம், நாகர்கோயில் – மங்களூரு – ஆகிய மூன்று வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோல், நாகர்கோயில் – மங்களூரு இடையே வரும் 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மங்களூரு – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயிலானது கோழிக்கோடு, பாலக்காடு, சேலம், அரக்கோணம் வழியாக சென்னை தாம்பரம் வந்தடையும் வகையில் வரும் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்