கரோனா 4-வது அலையை தடுக்க தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா 4-வது அலையை தடுக்க தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"கரோனா 4-வது அலை தமிழகத்தில் வந்தாலும் அதனை தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 50,000 மையங்களில் நடைபெற்று வரும் 26-வது மெகா தடுப்பூசி முகாம்களை ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர், சென்னையில் கரோனா காலத்தில் உயிரை காப்பாற்றியவர், மனித நேயர்கள் மற்றும் சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு அமைச்சர் விருது வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, சீனா, ஆகிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அடுத்த 2 மாதங்களுக்கு கவனமாக இருக்க கான்போர் ஐஐடி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 640 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் காப்பாற்றபட்டுள்ளனர் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in