4 நாள் பயணமாக துபாய் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

4 நாள் பயணமாக துபாய் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றார்.

துபாயில் கடந்த சில மாதங்களாக சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்திருந்தார். அதில் தமிழகத்திற்கான இடத்தில் தமிழகத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் புறப்பட்டு சென்றார். துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரான பின்னர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in