சென்னை பயணிகள் கவனத்துக்கு... நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்; தேர்தலையொட்டி நடவடிக்கை!

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

மக்களவைத் தேர்தலையொட்டி பயணிகளின் வசதிக்காக நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக 39 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும், வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக போக்குவரத்து துறையும், ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை வெள்ளிக் கிழமை அட்டவணை அல்லாமல், சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவை
மெட்ரோ ரயில் சேவை

அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in