சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் திடீர் இடமாற்றம்!

புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்
புவியரசன்
புவியரசன்hindu

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த புவியரசன் திடீரான பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் வானிலை ஆய்வு மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் வெள்ளக்காடாக மாறிப் போயிருந்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும் மழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சான்று இருக்கின்றது. உரிய காலத்தில் இந்த மையத்தில் இருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், அதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.

ஆனால் பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கவில்லை வழங்க இயலாத நிலை உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி கடிதம் எழுதினார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்ற இயக்குநர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in