கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றமா?: பதிலளிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றமா?:  பதிலளிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு

கல்லி நிறுவனங்களில் மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டி, அதை தடுக்க உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இல்லை எனவும், புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி, கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி, விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in