‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலைதான் காரணம்’

முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துhindu

‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல, மோசமான வானிலைதான் காரணம்’ என முப்படைகளின் விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ம் தேதி விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங்குக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்துhindu

ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு பல்வேறு தரவுகளை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி தேடி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கையின் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில், “ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல. ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால்தான் விபத்து நிகழ்ந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in