
அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த சபரிமாலா, நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்தவர். நீட்டுக்கு எதிரான பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகிறார். பள்ளி மாணவிகளுக்குக் குட்டைப் பாவாடைச் சீருடை வேண்டாம் என்றும், மாணவிகளுக்கு ஆசிரியைகளைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் பேசிவருபவர். தற்போது பள்ளிகளில் அதிகரித்திருக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான அவரது கருத்துகள் பரவலாகக் கவனத்தைப் பெற்றுவருகின்றன. ‘காமதேனு’வுக்காக அவரிடம் பேசினோம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.