இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
Updated on
2 min read

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கல்லூரியில்மாணவிகள்
கல்லூரியில்மாணவிகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்ற நிலையில் தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் 2024 - 25 ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புகிறவர்கள் இன்று முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு இன்று (மே 6) தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, இணையவழியில் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், இந்த உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai-15’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக கட்டணத்தை வழங்கலாம். உதவி மையங்கள் விவரம், மாணவர் சேர்க்கை கால அட்டவணை ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044–24343106 மற்றும் 24342911 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in