சீஷெல்ஸ் நாட்டில் சிறை பிடிக்கப்பட்ட 56 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்

சீஷெல்ஸ் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட 56 மீனவர்களும் அபராதம் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்தைச் சார்ந்த 5 விசைப்படகுகளில் கேரள மாநிலம் கொச்சி மற்றும் தேங்காய்பட்டணத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி, கேரளா மற்றும் வட இந்திய மீனவர்கள் 61 பேரை மார்ச் 7, 9 ஆகிய தேதிகளில் சீஷெல்ஸ் நாட்டு அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

இவர்களை உடனடியாக மீட்டு தாய்நாடு கொண்டுவர மத்திய - மாநில அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த மீனவர்கள் அனைவரும் இன்று சீஷெல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 56 மீனவர்கள் எவ்வித அபராதமுமின்றி விடுவிக்கப்பட்டனர்.

எவ்வித அபராதமுமின்றி இம்மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய - மாநில அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணிக்கும் மீட்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் போக எஞ்சிய 5 கேப்டன்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களையும், படகுகளையும் எவ்வித அபராதமுமின்றி விடுவிக்க மத்திய மாநில அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் ஜஸ்டின் ஆண்டணி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்கட்டமாக விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நாளை காலை கன்னியாகுமரிக்கு வந்துசேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in