வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து 22 பேர் கைது
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் இந்த செயல் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று கொந்தளிக்கின்றனர் தமிழக மீனவர்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக என்ற ஒன்றைக் காரணத்தை கூறி இலங்கை கடற்படை அத்துமீறி வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் பிரதமரையும் நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். இருந்தாலும் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை நள்ளிரவில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. மேலும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய அரசும் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை காணாமல் இருந்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in