தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் கைவரிசை

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் கைவரிசை

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைகத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

இதேபோல் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் 22 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in