எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மரியாதை; பிரதமர் மோடி புகழாரம்

‘சமூக நீதி தலைவர் எம்ஜிஆர்’
எம்ஜிஆர்
எம்ஜிஆர்தி இந்து

‘பாரத ரத்னா’ டாக்டர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ‘சமூக நீதி தலைவர் எம்ஜிஆர்’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இன்று காலை 10 மணி அளவில் சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், “பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

அதிமுக சார்பிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in