வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தில், "வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். மேலும் வன்னியர் சமுதாய மக்கள் பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது. அவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, "வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கு அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. இதில் போதிய தரவுகள் இல்லை என்பதற்காக அதனை நிராகரிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும். அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23-ம் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்ததோடு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in