7வது சுற்றில் தோல்வியடைந்து மனவேதனையை ஏற்படுத்தியது; மீண்டு வந்ததில் மகிழ்ச்சி... செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

தமிழக செஸ் வீரர் குகேஷ்
தமிழக செஸ் வீரர் குகேஷ்

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 7வது சுற்றில் தோல்வியடைந்தது மனவேதனையை அளித்த போதும், அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக செஸ் வீரர் குகேஷ் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ்,” கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் 7வது சுற்றில் தோல்வியடைந்தது மிகுந்த மன வேதனையை அளித்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னை பார்ப்பதற்காக இத்தனை பேர் வருகை தந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

குகேஷ்
குகேஷ்

மேலும், “இந்தியாவில் என்னை பார்த்து பலரும் செஸ் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது எனக்கு பெருமைமிகு தருணம். இதற்காக என்னுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். அடுத்து வரக்கூடிய உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்றார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி நேரத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் தான். ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லிங் டிரெனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். அனைவரின் ஒத்துழைப்போடும், திறமையாக விளையாடி போட்டியை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in