
இந்திய கிரிக்கெட் அணியில் 360 டிகிரி பேட்ஸ்மேனாக அறியப்படுபவர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடி ஆட்டத்தாலும், சிக்ஸர் மழையாலும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர். இந்நிலையில், அவர் புதிய அவதாரம் எடுத்து மும்பை வீதிகளில் ரசிகர்களை சந்தித்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 33வது லீக் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இன்று காலை ரசிகர்களை வித்தியாசமான அவதாரத்தில் சந்தித்தார்.
கையில் கேமராவுடன், முகத்தில் மாஸ்க் அணிந்த படி மும்பை வீதியில் வலம் வந்த அவர், ரசிகர்களிடம் தன்னை நிருபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு இந்திய அணி குறித்து பேட்டி எடுத்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் பதில்களை அளிக்க, சிறிது நேரம் கழித்து மாஸ்க்கை அகற்றிவிட்டு ரசிகர்கள் முன் நின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதனையடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்ட சூர்யகுமார் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதேபோன்று, தனது சக அணி வீரரான ரவீந்திர ஜடேஜாவையும் நிருபரை போல் சென்று சந்தித்து சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியளித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 12 புள்ளிகளுடன் கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கையுடனான நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!