வாணவேடிக்கை காட்டி சதமடித்த சூர்யகுமார் யாதவ்: நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை!

வாணவேடிக்கை காட்டி சதமடித்த சூர்யகுமார் யாதவ்: நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி சதமடித்தார். நியூசிலாந்தில் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்தியர் இவராவார்.

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னின் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் பொறுப்புடன் ஆடினார். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சினை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். கிஷன் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா தலா 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆனார்கள். இறுதிவரை நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 111 ரன்களை குவித்து அசத்தினார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் டிம் சவுதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சூர்யகுமார் இந்த ஆண்டு முழுவதுமே சிறப்பாக ஆடி வருகிறார். உலகக்கோப்பை டி20 போட்டியிலும் அதிரடி காட்டிய இவர்தான், இப்போது டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். 2018- ல் ரோஹித் சர்மா ஒரே ஆண்டில் இரண்டு டி20 சதங்களை அடித்தார். அவருக்கு அடுத்ததாக ஒரே ஆண்டில் இரண்டாவது சதமடித்த இந்திய வீரர் சூர்யகுமார் ஆவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in