கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் தமிழக வீராங்கனை... பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை!

பிரக்ஞானந்தா - வைஷாலி
பிரக்ஞானந்தா - வைஷாலி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி வென்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி வென்றுள்ளார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை பெற்றுள்ளார். 

இந்த போட்டியில் வைஷாலி 2,500 புள்ளிகளை கடந்ததன் மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in