156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து... சாம்பியனை அலறவிட்டது இலங்கை!

156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து... சாம்பியனை அலறவிட்டது இலங்கை!

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 156 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ, தாவீத் மலான் ஆகியோர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேர்ஸ்டோ 30 ரன்னுக்கும், மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி இன்று பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டது. இதனால் அடுத்தடுத்து களத்திற்கு வந்த ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மொயின் அலி 15 ரன்களிலும், வோக்ஸ் 0 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in