டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

கூடாரத்தில் தங்கியிருக்கும் கவுரவ்
கூடாரத்தில் தங்கியிருக்கும் கவுரவ்

தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், டெல்லிலிருந்து சைக்கிளில் பயணித்து சென்னை வந்து, அவரைக் காண சேப்பாக்கம் மைதான வாயிலில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தது பெரும் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

தோனியின் காலில் விழும் ரசிகர்
தோனியின் காலில் விழும் ரசிகர்

டெல்லி புறநகர் பகுதியைச் சேர்ந்தவரான கவுரவ், கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர். சென்னையில் நடைபெறும் போட்டியை நேரில் காணவும், தோனியை சந்திக்க வேண்டும் என்பதற்காகவும் தீவிர ஆவலில் இருந்து வந்தார். ஆனால் இவரிடம் அதற்கான பொருளாதார வசதி ஏதுமில்லை. இவரின் விருப்பத்தை தெரிந்துகொண்ட அவரது நண்பர்கள் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கு டிக்கெட் வாங்கித் தந்துள்ளனர். அந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு டெல்லியில் இருந்து தனது சைக்கிளில் புறப்பட்ட கவுரவ்,  23 நாட்கள் பயணித்து சென்னை வந்துள்ளார்.

தோனி
தோனி

நேற்று முன்தினம்  நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியைப்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கண்டு களித்தார். அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் அவர் ஊர் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னரும் அவர் டெல்லி திரும்பவில்லை.  எம்.எஸ். தோனியை நேரில் சந்தித்த பிறகே, டெல்லி செல்வேன் என்று கூறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே தங்கிவிட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தின் 9 வது  கேட் நுழைவு பகுதியில் கூடாரம் அமைத்து அவர் இரண்டு நாட்களாக தங்கி உள்ளார். தோனியை  எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். தோனி ரசிகரின் இந்த வெறித்தனமான செயல் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in