சனிப்பெயர்ச்சி 2023: பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள்? எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

சனிப்பெயர்ச்சி 2023: பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள்? எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் யார் தெரியுமா? சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான்தான் அவர்!

சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் :

ஆயுள், தொழில், கர்மா. இந்த மூன்றுக்கும் அதிபதி அதாவது காரகன் சனி பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்:

உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணெய்க் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர் சனி பகவான். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவரும் இவரே! அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகம் என்று போற்றப்படுகிறது. .

குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளை தெரிந்து கொள்ளலாம். சனி எங்கு இருக்கிறாரோ அதற்கு உண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் நமக்கான தடைகளை அகற்றி மீண்டுவரமுடியும்.

சனியின் பலம்:

சனி எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

பலன்களைப் பெறும் ராசிகள் விவரம் :

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - கன்னி - துலாம் - தனுசு

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - ரிஷபம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: கடகம் - சிம்மம் - விருச்சிகம் - மகரம் - கும்பம் - மீனம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in