
சர்ச்சையும், பள்ளிவாசலையும் அந்தந்த மதத்தினரே நிர்வகிக்கிறபோது, இந்துக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா? என்ற ஆர்எஸ்எஸ்சின் பிரச்சாரம், இப்போது தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்திருக்கிறது.
சென்னை மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய பிரச்சினையை பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்ப, இடைமறித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "முதல்வர் ஸ்டாலினை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானவராக சித்தரிப்பதா?" என்று கொதித்ததுடன், "இதைவைத்து யாராவது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்றால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்" என்று கோபத்துடன் சொன்னார்.
முதல்வர் ஸ்டாலினோ, "பாஜக உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியைத் பெற்றுத்தருவது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.