“இனிமேல் எப்போது பார்ப்போமோ?” என்று யாருக்காவது பிரியாவிடை கொடுத்திருக்கிறீர்களா? எதிர்பாரா சூழலில் அவர்களை மறுபடியும் சந்தித்து ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறீர்களா? ஏதென்ஸிலிருந்து நான் கிளம்பியபோது, இந்நகருக்கு எப்போது இனி வரப்போகிறேனோ என ஏங்கியிருக்கிறேன். பாரிஸின் லூவர் அருங்காட்சியகம் என் ஏக்கத்தைத் தணித்தது.
லூவர் அருங்காட்சியகம்
பாரிஸ் நகரைப் பாதுகாக்க, 12-ம் நூற்றாண்டில் ஒரு கோட்டை எழுப்பினார் அரசர் இரண்டாம் பிலிப். அதே இடத்தில், 1546-ல், அரசர் முதலாம் பிரான்சிஸ், லூவர் அரண்மனை கட்டத் தொடங்கினார். கலைப் பொருட்களைச் சேகரிக்கும் தீரா தாகம் கொண்டவர் முதலாம் பிரான்சிஸ். இவருக்குப் பிறகு வந்த அரசர்களும் அரண்மனை பரப்பளவை அதிகரிப்பதிலும், செழுமைப்படுத்துவதிலும், கலைப் பொக்கிஷங்களைச் சேகரிப்பதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இங்கிலாந்தின் முதலாம் சார்லஸை வெற்றிகொண்டபோது, அவரது கலைச் சேகரிப்புகள் அனைத்தையும் லூவர் அரண்மனைக்கு அள்ளி வந்தார் 14-ம் லூயிஸ்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.