
வைரஸ் என்பது ஒரு நுண்ணுயிரி என்று சொன்னேன். அப்படிச் சொல்வது அந்தக் கால நடைமுறை; அதை, ‘உயிரற்ற உயிர்’ என்று சொல்கிறது இந்தக் கால அறிவியல். ஏன்? என்ன காரணம்?
உதாரணம் சொன்னால் இது புரியும். பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரி. ஏனென்றால், அது உயிர் வாழும் கிருமி. அதனால் ஓரிடத்தில் சுயமாக வாழ முடியும்; காற்று, மண் என உயிரற்றவற்றிலும் வாழ முடியும். ஆனால், வைரஸை உயிர் வாழும் கிருமி என்று விவரிக்க முடியாது. விரும்பினால், அதை ஒரு துகள் (Particle) என்று வர்ணிக்கலாம். இந்தத் துகளானது, உயிரில்லாத இடத்திலோ பொருளிலோ இருந்தால், சிதைந்து போகும். காரணம், உயிரற்ற பொருளில் இந்தத் துகளால் வளரவோ பெருகவோ முடியாது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.