
கரோனா பரவலின் ஆரம்ப காலம். ‘யுத்தம் தொடங்கிவிட்டது; ஆனால், ஆயுதம் இல்லை!’ எனும் நிலைதான் உலகமெங்கும் கரோனாவின் ஆரம்ப அலையில் காணப்படுகிறது. கரோனா துயரத்திலிருந்து இந்த உலகை மீட்க ஒரு தேவதூதன் வானத்திலிருந்து இறங்கிவரமாட்டானா என்றுதான் பல நூறு கோடி மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
கரோனாவுக்கு எதிரான போரில் மருந்து, மாத்திரை, ஊசி எனும் வழக்கமான ஆயுதங்கள் இல்லாத நிலையில், தடுப்பூசி ஒன்றுதான் பேராயுதம் எனும் குரல் மருத்துவத் துறையில் ஓங்கி ஒலிக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளைப் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் முடுக்கிவிடுகின்றன. தமிழகத்தின் பங்குக்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசிக்கான பணிகள் தொடங்கப்படுகின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.