
டாக்டர். ஆர்.கார்த்திகேயன்
gemba.karthikeyan@gmail.com
நான் படித்த திருவல்லிக்கேணி பள்ளிக்கூடம், கதைசொல்லிகளின் கனவுலகம். படிப்பு பற்றிய பெரிய அழுத்தங்கள் கிடையாது. வைணவ நெறி ஆழமாக இருந்தாலும் ஒரு பன்முகத்தன்மையை இயல்பாகத் தழுவிய பள்ளி. தமிழ் வகுப்பில் கோபால் சக்கரவர்த்தி சார் கம்பராமாயணத்தை உருக்கமாகச் சொன்னால், சாமுவேல் அய்யா ஓவியம் சொல்லிக்கொடுப்பதோடு சாம்ஸன் டலேலா கதையும் சொல்லுவார். வகுப்பாசிரியர் வி.எஸ். சேஷாத்ரி சாயங்காலம் நடிக்க வேண்டிய ‘நரகாசுரன்’ நாடகத்தின் வசனத்தை எங்களிடம் நடித்துக்காட்டுவார். என் பிரிய வரலாற்று ஆசிரியர் துரைக்குட்டி, ‘மெய்ஜி ரெஸ்டொரேஷன்’ என்று எங்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்வார். ஆனால், என்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த கதைசொல்லி என் வகுப்புத் தோழன் ஏ.என்.சேஷாத்திரிதான். (ஏஎன்எஸ் என்று தான் விளிப்போம். வகுப்பில் மொத்தம் 4 சேஷாத்திரிகள்!)
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.