பி. சுவாமிநாதன்
பே ரும் புகழும் தேடி வர வேண்டும். நாமாக அதைத் தேடிச் செல்லக் கூடாது.
நம்மைத் தேடி வருகிற பேரும் புகழும்தான் பலராலும் போற்றப்படும். என்றென்றும் நிலைத்து நிற்கும்.
‘நான் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறேன்... என்னை மாதிரி ஒரு சமூக சேவகர் உண்டா?’ என்று ஒருவர் தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட,அவரைச் சுற்றி இருக்கின்றவர்கள் ‘அவர் எப்பேர்ப்பட்ட நல்ல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?’ என்று பலரிடமும் புருவம் உயர்த்திப் பெருமை பொங்கச் சொல்ல வேண்டும்.