காதல் ஸ்கொயர் 18

காதல் ஸ்கொயர் 18

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

வேனிலிருந்து மீட்கப்பட்ட கௌதம், நந்தினி ஆகிய இருவரையும் பரிசோதித்த டாக்டர், இருவரும் உயிரோடு இருப்பதாகக் கூற… அருண் நிம்மதியானான்.  ஆனால், அவர்கள் மயக்க நிலையில் உள்ளதாகவும்,  மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தால்தான் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியும் என்றும் டாக்டர் சொன்னார்.

கௌதமும் நந்தினியும் ஸ்ட்ரெச்சரில் வேகமாக மேலே தூக்கிச் செல்லப்பட்டனர். ஓரே ஆம்புலன்ஸில் இருவரும் ஏற்றப்பட்டனர். உடன் அருணும், மஹிமாவும் ஏறிக்கொள்ள…ஆம்புலன்ஸ் புறப்பட்டது. நர்ஸ்கள், இருவரின் உடலிலிருந்தும் ரத்தம் வழிந்த இடத்தில் கட்டுகள் போட்டனர். ஏதோ இன்ஜெக்‌ஷன் போட்டார்கள். இருவரின் முகத்திலும் ஆக்சிஜன் மாஸ்க்கை பொருத்த…அருண் இருவரையும் கவலையோடு பார்த்தான்.

மஹிமா, “அருண்… டிவி நியூஸ்ல எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனி டைம்… கௌதம், நந்தினியோட வீட்லருந்து போன் வரும். அதுக்கு முன்னாடி சொல்லிடுவோம்” என்றாள். அருண் யோசனையுடன் மொபலை எடுத்து கௌதமின் அப்பா மூர்த்திக்கு அடித்தான். ரிங் போக… கௌதம் பதற்றத்துடன் நகத்தைக் கடித்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in