
ஸ்ரீராம் சர்மா
(சென்ற வார தொடர்ச்சி...)
லாக்கப்புக்குள் இருந்த கொடிக்காவை ஒரு பார்வை பார்த்தபடி கலங்கிய கண்களோடு தீர்க்கமாக நின்றிருந்த ருக்குமிணியை ஏறிட்டார் ‘டி- 3’ இன்ஸ்பெக்டர்.
“ஐயா, உறுதியா சொல்றேன் கேட்டுக்குங்க. கொடிக்காவ சொந்த ஊரோட அனுப்பிடப் போறேன். அவனால இனிமே இங்க யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்காது. அவனும் இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேன்னு என் மேல சத்தியம் உட்டுட்டான். வேணும்னா எழுதிக்கூடத் தாரோம். நம்புங்க...”