
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
விடியற்காலை 6 மணிக்கு மேல் அந்த ரயில், திருவள்ளுர் ஸ்டேஷனில்நின்றுவிட்டுக் கிளம்பியது. லோயர் பர்த்தில் படுத்திருந்த கௌதம் தூக்கத்தில் திரும்பினான். யார் மீதோ கால் பட… சட்டென்று கண் விழித்துப் பார்த்தான். தனது காலடியில் பூஜா அமர்ந்திருப்பதைப் பார்த்த கௌதமிற்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே போர்டை பார்த்தான். திருவள்ளுர்.
வேகமாக எழுந்து அமர்ந்த கௌதம், “பூஜா... நீயும் இந்த ட்ரெய்ன்லதான் வர்றியா?” என்றான் இன்னும் கண்களிலிருந்து தூக்கமும், ஆச்சர்யமும் விலகாமல். பூஜா பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள். பூஜாவைப் பார்த்தால் ரயிலில் வந்ததுபோல் தெரியவில்லை. குளித்துவிட்டு வந்ததுபோல் ஃப்ரெஷ்ஷாக இருந்தாள். தொடர்ந்து கௌதம், “ஏய்… சொல்லு.திடீர்னு இங்க எப்படி?” என்றான்.
“உன்னைப் பாக்கதான் வந்தேன்”