
ஸ்ரீராம் சர்மா
தி ருவல்லிக்கேணியில் சில வீதிகளில் மட்டும்தான் பார்த்தசாரதி ஸ்வாமி ஆண்டுக்கொருமுறை பிரத்யேகமாக எழுந்தருளிச் செல்வார். எங்கள் தெருவும் அதிலொன்று!
அனைத்துச் சமூகமும் கூடி வாழும் எங்கள் வீதிவாசிகளுக்கு அதிலொரு பெருமை. வஸந்தோர்ஸவ புறப்பாட்டுக் காலத்தில் ராஜகோலத்தோடு சின்னக் குதிரை வாகனத்தில் எங்கள் தெருவுக்கு வருவார் பெருமாள்.
நாயுடு மாமா முன்னெடுப்பில் தெருவே களைகட்டும். வீடுவீடாகச் சென்று ஆண்டுதோறும் பெருமாளுக்காக முடிந்து வைத்த பணத்தை