
டாக்டர் மோகன வெங்கடாசலபதி
அலைபேசியை அதிகம் சார்ந்திருப்பது என்பது அடிமைத்தனமா என்ற விவாதத்தைக்கூட விட்டுவிடலாம். ஆனால், அலைபேசிப் பயன்பாடு பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறி வருவதை நிச்சயம் மறுக்க இயலாது.
பள்ளிக் குழந்தைகள் முதல் பக்கத்து வீட்டுத் தாத்தா வரை அலைபேசியைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். தவறில்லை. அலைபேசியும் இணையமும் நம்முடைய பல வேலைகளை மிக எளிதாக முடித்துக்கொள்ள வழிவகை செய்கின்றன. அவற்றின் பயன்பாடு அபரிமிதமாக அதிகரிக்கும்போது, நம் உடலும் மனமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன என்பதுதான் நாம் சுதாரிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
உடல் ரீதியிலான பாதிப்புகள்