
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
திரும்பிய வேகத்தில் கௌதமின் மேல் மோதிய நந்தினி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தாள். “ஏய்…. நந்தினி…” என்று கௌதம் வேகமாக நடந்தான். அவளுக்கு முன்னால் சென்று, வழியை மறித்தாற்போல் நின்றான். நந்தினி, “உனக்கு இப்ப என்ன வேணும்?” என்றாள் முறைப்பாக.
“நீ என்கிட்ட பேசணும்.”
“என்ன பேசணும்?” என்ற நந்தினி ஸ்வெட்டர் போடவில்லை. திடீரென்று குளிர் அதிகரிக்க, நந்தினி கையை இறுகக் கட்டிக்கொண்டாள்.