
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
அறையில் அருண் ஸ்வெட்டர் மேல் டீசர்ட்டை அணிந்தபடி கௌதமிடம், “நீ கிளம்பல?” என்றான். “எங்க?” என்றான் கௌதம்.
“நீ மெயில் பாக்கலையா? இன்னைக்கி ஃபுட்கோர்ட் ஃபோர்ல டிஜே நைட். போயி எல்லா பேட்ச் பொண்ணுங்களையும் ஒருசேர பாத்துட்டு வந்தா இம்மையில் மறுமை அடைஞ்சுடலாம் வா.”
“நான் வரல. எனக்கு மனசே சரியில்ல. நீ சொன்னன்னு நந்தினிகிட்ட ‘உன் கதைல்லாம் நல்லால்ல’ன்னு சொன்னேன். ரெண்டு நாளா அவ பேசறதே இல்ல.”