இணையச் சிறையின் பணயக் கைதிகள் 10: தொழில்நுட்பத்தால் தொலையும் மகிழ்ச்சி

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 10: தொழில்நுட்பத்தால் தொலையும் மகிழ்ச்சி

டாக்டர் மோகன வெங்கடாசலபதி

காலை நேர நடைப்பயிற்சியின்போது டிகிரி காபி ஒன்று குடிக்கலாம் என்று கடைக்குச் சென்றேன். என்னைத் தள்ளிக்கொண்டு அவசரமாகச் சென்றார் அந்த வாடகைக்கார் டிரைவர்.

“எங்க பாத்தாலும் எப்போ பாத்தாலும் போன்ல பேசிக்கிட்டு… ஒரே இம்சையாப் போச்சி, ஏம்மா ஒரு காபி போடுவியா எப்படி? என்னால ரொம்ப நேரம் நிக்கல்லாம் முடியாது” என்றபடியே கடுப்பாகக் கடைக்குள் நுழைந்தார். அவர் சொன்னது மாதிரியே கல்லாவில் நின்றுகொண்டிருந்த அந்த அம்மா கைபேசியில் யாருடனோ பிஸியாக இருந்தார். இதைக் கேட்டதும் அவருக்கு வந்ததே கோபம். “இப்பதானே வந்தீங்க! அதுக்குள்ளே என்ன அதிகாரம் வேண்டிக்கிடக்கு. என் போன் நான் பேசுவேன். நீங்க யாரு கேக்க? காபி கொடுக்க லேட் ஆனா மட்டும் கேளுங்க” என அந்த அம்மா எகிற, வந்தவர் பதிலுக்கு ஏதோ சொல்ல… இனி நாம் விஷயத்துக்கு வருவோம்.

காலையிலேயே அந்த டாக்ஸி டிரைவர் ஏன் அவ்வளவு எரிச்சல் அடைகிறார்? கைபேசிப் பேச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பாரோ?!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in