
ஸ்ரீராம் சர்மா
கோடை விடுமுறை வந்தால் எல்லோரும் ஊரிலிருக்கும் பாட்டி வீட்டுக்குப் போய் கும்மாளம் போட்டு வருவதுதானே வழக்கம்.
எங்கள் வீட்டுக் கதை தலைகீழ். பாட்டியே திருவல்லிக்கேணிக்கு வந்து விடுவாள்.
அம்மு பாட்டிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம். காரணம் கிடைத்தால் போதும் திருவல்லிக்கேணி வந்திறங்கி விடுவாள். வந்ததும் வராததுமாக அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து பார்த்தசாரதி கோயில் கொட்டாரத்துக்கு ஓடி விடுவாள்.