பாப்லோ தி பாஸ் 22: ஒரு ‘எதிரி’ அழிந்தான்…!

பாப்லோ தி பாஸ் 22: ஒரு ‘எதிரி’ அழிந்தான்…!

ந.வினோத் குமார்

கொலம்பிய நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது பாப்லோ நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த நாட்டு அரசுக்கும் நார்கோக்களுக்கும் இடையிலான மோதல் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைந்து வந்தது. பாப்லோவும் ஒரே இடத்தில் தங்கி இருந்து தன் தொழிலைக் கவனிக்க முடியாமல், பெரும்பாலான நேரம் அங்கே இங்கே என்று பதுங்கி வாழ்ந்து வந்தான். ஆனால் அவ்வப்போது, ஆளுநர் போன்ற அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை அவன் நிறுத்தவில்லை.

இந்நிலையில்தான் பழைய கணக்கு ஒன்றைத் தீர்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அது 1989-ம் ஆண்டு. அதற்கு அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் லூயி கார்லோஸ் கலான், நிச்சயம் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் நம்பினார்கள். ஆனால், பாப்லோ மட்டும் அவர் அதிபராக மாட்டார் என்று திடமாக நம்பினான். அதுசரி… அதிபராவதற்கு அவர் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘புது லிபரல் கட்சி’யிலிருந்து லாராவால் பாப்லோ நீக்கப்பட்டானே… அந்தக் கட்சியின் தேசிய தலைவர்தான் இந்த கார்லோஸ் கலான். ‘எல் டியெம்போ’ செய்தித்தாளில் பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கலான், 70-களில் மிசேல் பஸ்த்ரானா அதிபராக இருக்கும்போது கல்வி அமைச்சராக இருந்தவர். கொலம்பியாவுக்கான இத்தாலி நாட்டுத் தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட கலான் 1979-ல் ‘புது லிபரல் கட்சி’யைத் தொடங்கினார். 1989-ல் தனது கட்சியை மூலக் கட்சியான ‘லிபரல் கட்சி’யுடன் இணைக்க முடிவு செய்தார் கலான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in