காதல் 2

காதல் 2

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
grsnath71@gmail.com

இரண்டு நாட்களாகக் கடும் மழை, நீலகிரி மலைத்தொடரை உலர விடாமல் தொடர்ந்து நனைத்துக்கொண்டிருந்தது. குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயிலில் கௌதமும் நந்தினியும் ஏறியபோதும் மழை பெய்துகொண்டிருந்தது. கௌதம் ஜெர்கின் அணிந்திருந்தான். நந்தினி ஸ்வெட்டரின்றி நீல நிறத்தில் சல்வார்கமீஸ் அணிந்திருந்தாள். அந்தப் பெட்டியில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.

கௌதம், “மழைக்கு மக்கள் வீட்டுலயே முடங்கிட்டாங்க” என்றபோது நந்தினி தன் கூந்தலை உதற, கூந்தலிலிருந்து மழைத்துளிகள் கௌதமின் முகத்தில் சிதறின. கௌதம், “கடவுளே…” என்று கண்களை மூடித் திறந்தான். ரயில் புறப்பட்டவுடன் நந்தினி வேகமாக ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in