இணையச் சிறையின் பணயக் கைதிகள் 7- தளர்ந்தன கட்டுப்பாடுகள்... தகர்ந்தன நாகரிகங்கள்...

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 7- தளர்ந்தன கட்டுப்பாடுகள்... தகர்ந்தன நாகரிகங்கள்...

டாக்டர் மோகன வெங்கடாசலபதி

செல்பேசி இல்லாத காலத்தை நினைத்துப்பாருங்கள். கேம்லின் பேனாவில் மை ஊற்றிக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து பொறுமையாக யோசித்து முத்து முத்தான கையெழுத்தில் அத்தைக்கு ஒரு கடிதம் போடுவோம். உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம்.

வார இறுதிக்காக ஏங்கியிருக்கிறோம் அப்போது. தொலைத்தொடர்பெல்லாம் தேவையில்லை. எங்கள் ஊர் மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் ஞாயிறுமாலை ஆறு மணிக்கெல்லாம் கூடிவிடுவார்கள் ஒரே பள்ளியில் படித்த முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் வாங்கும் வரையில் எல்லாம் நன்றாகவே நடந்தது. ஒருவருக்குப் பணி மாற்றம். இன்னொருவருக்கு வேறு ஊரில் திருமணம், அங்கேயே செட்டில்டு, இன்னொருவருக்கு நேரமில்லை. ஆனால், எல்லோரும் போனில்பேசிக்கொள்கிறார்கள். எல்லா விஷயத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். என்ன, அப்போதெல்லாம் மனிதர்களுடன் நிறைய நேரம் செலவழித்தோம். உணர்வுகள் நேரடியாக முகத்துக்கு முகம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. வரைமுறை அறிந்து பேசினோம். பழகினோம். நட்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பாடுபட்டோம்.

உங்கள் முகத்துக்கு நேராக நான் பேசும்போது ஏதேனும் மாற்றுக் கருத்தைத் தெரிவிப்பதாக இருந்தாலும் ஒரு இங்கிதம் இருக்கும். லேசாக நீங்கள் எரிச்சலடைவதையோ, நான் சொல்வதைச் சுத்தமாக நீங்கள் ரசிக்கவில்லைஎன்பதையோ நான் உணர்ந்துகொண்டால் போதும். பேச்சின் வேகத்தையும் ஆழத்தையும் மட்டுமல்ல, உள்ளடக்கத்தையே மாற்றி “என்னங்க ஜப்பான்ல நிலநடுக்கமாமே… ஜலகண்டபுரத்துல மழையாமே” என்று லாவகமாக மடைமாற்றிவிடலாம். நம் இருவருக்குமான நட்பு அதற்கப்புறம் வேறு பிரச்சினை எதுவுமில்லாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால், ஆன்லைனில் அது சாத்தியமில்லை. முகத்தைப் பார்க்கத்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in