
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஒரு வார கால ஓரியன்ட்டேஷன் வகுப்புகள் நிறைவுற்று, இரண்டு நாள் ஸிப்ளஸ் ப்ளஸ் மாட்யூல் முடிந்து, இன்று ஆன்லைன் எக்ஸாம். மெஷின் ரூமை நோக்கி நடந்தபடி அருண், “உள்ளுக்குள்ள உதைப்பா இருக்கு மச்சி. ஒரு கோட்ஸ்னிப்பிட்டப் பாத்து, ரன் ஆவுமான்னு எப்படிறா தெரியும்? எனக்கு ஹேஷ்இன்க்ளுட் பண்ணாம பாத்தா கட்டுரை மாதிரிதான் இருக்கு. கோட் மாதிரியே இல்ல” என்றான்.
கௌதம், “அதுவும் ஒரு லாங்வேஜ்தானடா” என்றபோது பின்னாலிருந்து, “கௌதம்…” என்று குரல் கேட்கத் திரும்பினான். நந்தினி. அருண், நந்தினியைப் பார்த்தவுடன் பீதியுடன், “மச்சி நான் கிளம்பறன்டா” என்று வேகமாக நகர்ந்தான். அவன் சட்டையைப் பிடித்திழுத்த கௌதம், “டேய்… அவ கூப்பிடுறா. மேனர்ஸ் இல்லாம…” என்ற கௌதமின் பேச்சை இடைமறித்த அருண், “மச்சி… அவ கதையைப்
படிச்சு, ஒரு வாரம் காய்ச்சல்ல அவதிப்பட்டு,இப்பதான்டா நார்மலாயிருக்கேன். திருப்பி அவ கதை, கிதை சொன்னா உடம்பு தாங்காது மச்சி” என்றான்.