
ஸ்ரீராம் சர்மா
தமிழ் இலக்கியம் படிக்கச் சென்ற அவனுக்குக் கல்லூரி கசந்தது.
எதிரே இருந்த பெரியார் பில்டிங்கில் காலாட்டிக்கொண்டு கம்பனைச் சொல்வதும், கவிதைப் போட்டிக்குப் போவதும், நாடகம் நடத்த ஆள் சேர்ப்பதுமாக காலம் கடத்திக்கொண்டிருந்தான்.
திருவல்லிக்கேணியில் கசகசவென்று இருக்கும் ஜாம்பஜார் பக்கம் வகுப்புத் தோழன் பாண்டியன் மூலமாக அவனுக்கோர் அற்புதமான நட்பு வட்டாரம் அமைந்தது.