காதல் ஸ்கொயர் 5

காதல் ஸ்கொயர் 5

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

அன்றிரவு அறையில் கௌதமின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்த அருண், கௌதமின் கால்களைப்  பிடித்துக்கொண்டு, “என்ன விட்டுடுரா…” என்று கதறினான். வேறு ஒன்றுமில்லை. கௌதம், நந்தினியின் கதைகளைப் படிக்கக் கொடுத்திருந்தான்.

கௌதம், “டேய்… என்னடா… இன்னும் ஒரே ஒரு கதை மட்டும் படிச்சிடு”என்றான்.

“அய்யோ…. வேண்டாம்டா” என்ற அருண் அழுவதுபோல், “குறை மாசத்துல பொறந்தவன்டா நானு. அதுலயே பாடி வீக்கு. அதில்லாம சின்னவயசுல நாலு தடவ டைபாய்டு வந்து நோய்எதிர்ப்பு சக்தியே கம்மின்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. இந்தக் கதையயெல்லாம் என் பாடிதாங்காதுடா. என்னை விட்டுடுரா. நான் சென்னைபோயி, ஸிவிக்கி டெலிவரி பாய் வேலை பாத்தாச்சும் பொழச்சுக்கிறன்” என்று கதற, கௌதம் வேறு வழியின்றி, “சரி எழுந்திரி” என்றான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in