
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
அவள் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு கௌதம், “டேய்...அழறாடா...” என்றான் அருணிடம்.
“அதுக்கு?”
“நம்ம தஞ்சாவூர் தமிழ்ப் பொண்ணு. வா போய் ஆறுதல் சொல்வோம்” என்று கௌதம் அவளை நெருங்கினான். “எக்ஸ்கியூஸ் மீ” என்று கௌதம் அழைக்க... அவள் திரும்பினாள். சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு, “என்ன?”என்றாள்.