
ஸ்ரீராம் சர்மா
எண்பதுகளில்... கார்த்திகை திருநாள் காலத்தில் திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி கட்டாயம் ருக்குபாயைக் காணலாம்.
சுமார் ஐந்தடி உயரம். வயது முப்பது போல இருக்கும். மஞ்சளை வலிந்து பூசிக்கொண்ட முகம். குழி விழுந்த வெளிர் நீலக் கண்கள். நல்லெண்ணெய் கொண்டு அழுந்த வாரப்பட்ட தலைமுடி. காதுகளில் பிளாஸ்டிக் ஜிமிக்கி.
ருக்குபாய்க்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்தது.