மரணத்திற்கு முன்பு ரயிலில் மாணவன் செய்த சாகசம்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

மரணத்திற்கு முன்பு ரயிலில் மாணவன் செய்த சாகசம்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஓடும் ரயிலில் வெளியே தொங்கிக் கொண்டே சாகசம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார். அவர் இறப்பதற்கு முன்பு ரயிலில் அபாயகரமாக தொங்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டை அடுத்த ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நீதிதேவன் (19). இவர் சென்னை மாநில கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு தினமும் ரயிலில் சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் நீதிதேவனும், அவரது நண்பர்களும் வெளியே தொங்கிக் கொண்டே பயணம் செய்தனர்.

நீதிதேவன்.
நீதிதேவன்.

அப்போது வேப்பம்பட்டு - செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையில் நீதிதேவன் தவறி விழுந்தார். இதனால் படுகாயமடைந்த நீதிதேவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் படுகாயமடைந்த மாணவன் நீதிதேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிதேவன் இறப்பதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயிலில் தொங்கியபடியும், மேற்கூரையில் ஏறுவது போன்றும் அவர் சாகசங்கள் செய்வது பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in