
"காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நேரங்களில் செல்போனை பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அலுவலக நேரத்தின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதி 1973இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.