
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அரியவகை மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு கூடுதலாக 1,164 ஹெக்டேர் பரப்பில் தாது மணல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. அதற்கு தமிழக அரசும் தடையில்லாச் சான்று வழங்கியிருப்பதை அறிந்து கடலோர கிராமங்கள் கொந்தளிப்பில் இருக்கின்றன.
தாதுமணல் பிரித்தெடுப்பால் கடலோர கிராமங்களில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மீனவர்களின் நீண்ட நாளைய அச்சம். இந்த நிலையில் அரசின் தற்போதைய முடிவு அவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முதலில் பொதுத்துறை நிறுவனத்திற்கு அனுமதிகொடுத்துவிட்டு மெல்ல மெல்ல தனியாரையும் தாது மணல் அள்ள அனுமதிப்பதற்கான முன்முயற்சியே இது என ஆளும் திமுகவை நோக்கிப் பாய்கின்றனர் மீனவர்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.