மாணவர்களின் கைகளில் சாதி கயிறு: அதிரடி காட்டிய கல்வி அதிகாரி

மாணவர்களின் கைகளில் சாதி கயிறு: அதிரடி காட்டிய கல்வி அதிகாரி

பள்ளிகளில் சாதியைக் குறிப்பிடும் வகையில் மாணவர்கள் கயிறு அணிந்து வர தடை விதித்துள்ள தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாமல் தனிக் குழுக்களாக செயல்படும் சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மாணவர் நலன் கருதி தலைமையாசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களுக்கு சாதியால் ஏற்படும் விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும்போது எடுத்துக் கூற வேண்டும். சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண்டும்.

இவ்வகையான சாதியை அடையாளப்படுத்தும் கயிறு அணிவதைத் தடுக்குமாறும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in