அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: யோகி ஆதித்யநாத் பாதுகாப்பிற்கு வந்த சிக்கல்!

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: யோகி ஆதித்யநாத் பாதுகாப்பிற்கு வந்த சிக்கல்!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு நேற்று சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். வழிபாட்டிற்கு பிறகு மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று வாரணாசியிலிருந்து தலைநகர் லக்னோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திடீரென அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் பறவை மோதியதை அறிந்த பைலட் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்படக்கூடாது என்பதால் அவசரமாக வாரணாசியில் உள்ள போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் தரையிறக்கியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது எனத் தெரியவந்த காரணத்தால், அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றொரு அரசு ஹெலிகாப்டரை வரவழைத்து லக்னோ புறப்பட்டார். யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது வாரணாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in